பேரிடர் காரணமாக அனர்தத்திற்குள்ளான அனைத்து வழிபாட்டு தலங்களையும் துப்பரவு செய்து, வழமைக்கு கொண்டுவர அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
அதற்கமைய, வழிபாட்டுத் தலங்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்க தேவையான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதற்குரிய யோசனையை ஜனாதிபதி முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
