ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தும் இரசாயனப் பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு 90 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த சம்பத் மனம்பேரியை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரிக்க வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் இன்று (24) உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் மனம்பேரியை எதிர்வரும் ஜனவரி 07ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
