கைது செய்யப்பட்ட முன்னாள் சபாநாயகரும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினருமான அசோக ரங்வலவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் அசோக ரங்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
அசோக ரங்வல 200,000 ரூபா சொந்த பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, இது தொடர்பான வழக்கு எதிர்வரும் 19 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.
