Our Feeds


Wednesday, December 3, 2025

Zameera

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளின் நிவாரணப் பணிகளுக்கு ஆப்பிள் நிறுவனம் நிதியுதவி


 வெள்ளம், மண்சரிவு மற்றும் பலத்த காற்று காரணமாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளுக்கான நிவாரணப் பணிகளுக்கும், மீள்கட்டுமானப் பணிகளுக்கும் உதவிகளை வழங்க ஆப்பிள் (Apple) நிறுவனம் முன்வந்துள்ளது. 

 

இந்நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டிம் குக், தனது 'X' கணக்கில் பதிவொன்றை இட்டு இதை உறுதிப்படுத்தியுள்ளார். 

 

தாய்லாந்து, இந்தோனேஷியா, மலேசியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அனர்த்த நிலைமை காரணமாக அங்குள்ள மக்கள் தற்போது மிகவும் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி குறிப்பிட்டுள்ளார். 

 

இலங்கை உட்பட பல ஆசிய நாடுகளில் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாக 1,300 இற்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதுடன், மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. 

 

இதற்கமைய, அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளின் நிவாரண மற்றும் கட்டுமானப் பணிகளுக்குத் தேவையான பங்களிப்பை வழங்குவதற்கு ஆப்பிள் நிறுவனம் இவ்வாறு முன்வந்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »