நாட்டில் நிலவிய பாதகமான காலநிலையால் ஏற்பட்ட பேரிடர் காரணமாக கடந்த சில நாட்களாகவே மீட்புப் பணிகளில் ஈடுபட்ட அமெரிக்க விமானம் மற்றும் இந்திய ஹெலிக்கொப்டர்கள் தங்களது பணிகளை நிறைவு செய்த பின்னர் நாட்டை விட்டு புறப்பட்டுள்ளன.
அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தங்களில் தேடுதல் - மீட்பு, நிவாரணப் பொருட்கள் விநியோகம் மற்றும் அவசர உதவி நடவடிக்கைகளுக்கு ஆதரவாக இந்த விமானம் மற்றும் ஹெலிக்கொப்டர்கள் பயன்படுத்தப்பட்டன.
