குண்டசாலை பல்வேறு சேவைகள் கூட்டுறவுச் சங்கத்திற்கு குழுப் பிரதிநிதிகளை நியமிப்பதற்காக நடைபெற்ற தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி படு தோல்வியடைந்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியை ஆதரித்த எந்த ஒருவரும் இயக்குனர் சபைக்கு தெரிவு செய்யப்படவில்லை.மொத்தம் தெரிவு செய்யப்பட்ட 7 இயக்குனர்களில் 6 பேர் பொதுஜன பெரமுன கட்சியையும் ஒருவர் ஶ்ரீ லங்கா சுதந்திர கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
