ஈரான் உச்ச தலைவர் இல்லத்தை குறிவைத்தும் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது. அமெரிக்கா- இஸ்ரேல் இணைந்து இந்த தாக்குதலை தொடர்ந்துள்ளது. ஈரான் மீதான வான்வழித் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ள இஸ்ரேல், அந்நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் முக்கிய உளவுத்துறை அலுவலகங்கள் உட்பட இடங்களைத் தாக்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே தனது ட்ரூத் சமூக வலைத்தளத்தில் பேசியுள்ள டிரம்ப், ஈரானுக்கு அணு ஆயுதங்கள் செல்வதை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஈரான் மீது மிகப்பெரிய தாக்குதலை ஆரம்பித்துள்ளோம். ஈரானின் கடற்படை முற்றிலும் அழிக்கப்படும். போர் நடக்கும் போது நல்லது கெட்டது இரண்டும் நடக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
