நேற்றைய தினம் (31), மொஸ்கோ நேரப்படி மாலை 6:00 மணியளவில் க்ரைமியா தீபகற்பத்தின் மேல் திட்டமிடப்பட்ட பயணத்தில் இருந்த குறித்த விமானம், திடீரென கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்தது. இதனைத் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளின் போது, விமானம் விபத்துக்குள்ளான இடம் கண்டறியப்பட்டது.
விபத்துக்குள்ளான விமானத்தில் 6 விமானப் பணியாளர்களும் 23 பயணிகளும் என மொத்தம் 29 பேர் பயணித்திருந்ததுடன், அவர்கள் அனைவரும் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானத்தின் சிதைந்த பாகங்களை ஆய்வு செய்ததில், வெளிப்புறத் தாக்குதல்கள் எதற்கும் இலக்கானதற்கான அறிகுறிகள் தென்படவில்லை என பாதுகாப்பு அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இதனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நேரிட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சின் விசேட குழுவொன்று ஸ்தாபிக்கப்பட்டு, விபத்து நடந்த இடத்தில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அண்மைய நாட்களாக வான்வழி அச்சுறுத்தல்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்த விபத்து சர்வதேச ரீதியாகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
