Our Feeds


Thursday, June 4, 2026

Admin

மருந்துகளின் விலைகளை அதிகரிப்பது குறித்து சுகாதார அமைச்சு அவதானம்!


டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைந்துள்ளதைத் தொடர்ந்து, மருந்துகளின் விலைகளையும் அதிகரிப்பது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபை (NMRA) தெரிவித்துள்ளது.

இதற்குத் தேவையான ஆரம்பக்கட்ட பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அந்த அதிகாரசபையின் தலைவர், விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இறக்குமதி செய்யப்படும் மருந்துகள் மற்றும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் மருந்துகளின் விலைகளை அதிகரிப்பதற்கான முதற்கட்ட நடவடிக்கைகள் திட்டமிடப்பட்டுள்ளன.

அரசாங்க வர்த்தமானி மூலம் அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ள 60 மருந்து வகைகளின் விலைகளையும் அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம மேலும் தெரிவித்தார்.

இது குறித்து மேலும் கருத்து வெளியிட்ட தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் தலைவர்,

"டொலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு வீழ்ச்சியடைவதால் அனைத்துப் பொருட்களின் விலைகளும் அதிகரிப்பதை நாம் அறிவோம். அதற்கமைய, மருந்துகளின் விலைகளும் அதிகரிக்கக்கூடும். இது குறித்து ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நமது நாட்டில் பெரும்பாலும் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளே பயன்படுத்தப்படுகின்றன. அனைத்து மருந்துகளின் விலைகளும் அதிகரிக்காது, ஆனால் சில குறிப்பிட்ட மருந்துகளின் விலைகளில் அதிகரிப்பு ஏற்படும்."

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »