Our Feeds


Thursday, July 30, 2026

ShortNews

பிணை கிடைத்தும் சிறை சென்ற சரித் அபேசிங்க விடுவிக்கப்பட்டார்!



பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமையினால் அண்மையில் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சரித் அபேசிங்க இன்று (30) பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ததை அடுத்து சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் எனக் கூறப்படும் 'ஹரக் கட்டா' என்பவரின் மனைவியிடம் இருந்து 12 கோடி ரூபா இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சட்டத்தரணி ரக்கித ராஜபக்ஷ, சரித் அபேசிங்க உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் கடந்த 28ஆம் திகதி காலை பிணை வழங்கி உத்தரவிட்டது.


ரக்கித ராஜபக்ஷ உள்ளிட்ட இரு சந்தேகநபர்கள் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தமையினால் அவர்களைச் சிறைப் பொறுப்பிலிருந்து விடுவிக்க உத்தரவிடப்பட்டது.

எனினும், சந்தேகநபரான சரித் அபேசிங்க என்பவரால் பிணை நிபந்தனைகளைப் பூர்த்தி செய்ய முடியாமையினால் அவர் மீண்டும் சிறைப் பொறுப்பில் வைக்கப்பட்டிருந்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »