Our Feeds


Wednesday, September 2, 2026

ShortNews

மனுக்கள் மீதான விசாரணை இரண்டாம் நாளாக இன்றும்!


அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட அரசியலமைப்பின் 22 வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை, உயர் நீதிமன்றத்தில் இன்று (02) இரண்டாவது நாளாக ஆரம்பமாகியுள்ளது.

பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சுரசேன, அச்சல வெங்கப்புலி, அர்ஜுன ஒபேசேகர, சம்பத் அபேகோன் மற்றும் கிஹான் குலதுங்க ஆகியோர் அடங்கிய 5 பேர் கொண்ட உயர் நீதிமன்ற அமர்வின் முன்பாக இந்த மனுக்கள் விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

தற்போது, 22 வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக​​ மனுக்களைத் தாக்கல் செய்த மனுதாரர்களின் வழக்கறிஞர்கள் தங்களுடைய வாதங்களை முன்வைத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »