Our Feeds


Monday, September 7, 2026

Zameera

யால தேசிய வனத்தின் இரு வலயங்கள் தற்காலிகமாக மூடல்


 நிலவும் கடுமையான வெப்பநிலை காரணமாக விலங்குகள் மற்றும் வனவிலங்கு அதிகாரிகளுக்கு ஏற்படும் வெப்ப அழுத்தத்தைக் கருத்திற்கொண்டு, யால தேசிய வனத்தின் 01 மற்றும் 02 ஆம் வலயங்களை தற்காலிகமாக மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 


குறித்த இரண்டு வலயங்களையும் எதிர்வரும் 14 ஆம் திகதி முதல் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இன்று (07) நடைபெற்ற 'BIG FOCUS' நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் மஞ்சுள அமரரத்ன தெரிவித்தார். 


நிலவும் கடும் வெப்பமான வானிலை காரணமாக விலங்குகளுக்கு நீர் பற்றாக்குறை மற்றும் வெப்ப அழுத்தம் கடுமையாகப் பாதித்துள்ளதாகக் குறிப்பிட்டார். 


மேலும், அதிகளவிலான சுற்றுலா ஜீப் வண்டிகள் வனத்திற்குள் பயணிப்பதால், தற்போதைய சூழ்நிலையில் வனவிலங்கு அதிகாரிகள் தமது கடமைகளை முன்னெடுப்பதில் அசௌகரியங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். 


இலங்கையின் வறண்ட வலயத்தைச் சேர்ந்த யால 1 மற்றும் 2 மட்டுமன்றி, மன்னார் மற்றும் வில்பத்து தேசிய வனங்களை அண்டிய பகுதிகளில் நிலவும் நிலைமை தொடர்பிலும் அதிகாரிகள் அவதானத்துடன் செயற்பட்டு வருவதாக மஞ்சுள அமரரத்ன தெரிவித்தார். 


தேவைப்படும் சந்தர்ப்பங்களில் குறித்த வனங்களை மூடுவதற்கோ அல்லது விலங்குகள் மற்றும் அதிகாரிகளுக்கு வெப்ப அழுத்தம் இன்றி செயற்படுவதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பதற்கோ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »