Our Feeds


Tuesday, August 27, 2019

www.shortnews.lk

ஷீயா போராக்களின் இலங்கை மாநாட்டுக்கு 100 ஹோட்டல்களில் 3000ம் அறைகள்

 


புனித குர்ஆனுக்கும், நபி முஹம்மத் (ஸல்) அவர்களின் தெளிவான வழிகாட்டல்களுக்கும் மாற்றமாக செயல்பட்டு இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றமான தனி மதமாக பார்கக்ப்படும் ஷீயாக்களின் ஒரு பிரிவான தாவுதி போரா சமூ­கத்தின் ஆன்­மிக மாநாடு எதிர்­வரும் செப்­டெம்பர் 1 ஆம் திகதி முதல் 10 தினங்கள் கொழும்பில் நடை­பெ­ற­வுள்­ளது. எதிர்­வரும் 1 ஆம் திகதி பம்­ப­ல­பிட்டி மெரைன் டிரைவில் அமைந்­துள்ள தாவூதி போரா பெரிய பள்­ளி­வா­சலில் இம்­மா­நாடு ஆரம்­ப­மா­க­வுள்­ளது. இம்­மா­நாட்­டுக்கு போரா சமூ­கத்தின் தலைவர் முபத்தல் செய்­னுத்தீன் தலைமை வகிக்­க­வுள்ளார்.
இந்த மாநாட்டில் கலந்து கொள்­வ­தற்­காக போரா சமூ­கத்தைச் சேர்ந்த சுமார் 21 ஆயிரம் பேர் இலங்கை வர­வுள்­ளனர். தொடர்ந்து 10 தினங்கள் நடை­பெ­ற­வுள்ள இந்த மாநாட்டில் கலந்­து­கொள்ள வரு­ப­வர்கள் தங்­கி­யி­ருப்­ப­தற்­காக கல்­கிசை, கொழும்பு மற்றும் நீர்­கொ­ழும்பு பகு­தி­களில் சுமார் 100 பிர­பல ஹோட்­டல்­களில் சுமார் 3000 அறைகள் பதிவு செய்­யப்­பட்டு ஒதுக்­கப்­பட்­டுள்­ளன. மேலும் இந்தப் பிர­தே­சங்­களில் சொகுசு மாடி வீடு­களும் ஒதுக்­கப்­பட்­டுள்­ளன என சுற்­றுலா அமைச்சின் அதி­கா­ரி­யொ­ருவர் தெரி­வித்தார். 
vidivelli

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »