காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் 370, 35ஏ சட்டப் பிரிவுகளை மீளப்பெற தீர்மானம்
இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையில் (ராஜ்யசபா) நேற்று முன்தினம் நிறைவேற்றப்பட்டது.
ஜம்மு- – காஷ்மீர் மாநிலத்தை இரு யூனியன் பிரதேசங்களாக
பிரிக்கும் மசோதாவும் மாநிலங்களவையில் நிறைவேறியது.
இந்நிலையில், பாகிஸ்தான்
இராணுவத்தின் தீர்மானம் மேற்கொள்ளும் அதி உயர் அமைப்பான, படைத் தளபதியின் மாநாடு நேற்று கூடியது.
இக்கூட்டத்தில் பாகிஸ்தான் இராணுவத் தளபதி
ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா பேசுகையில், காஷ்மீர்
மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு பாகிஸ்தான் இராணுவம் ஆதரவளிப்பதை
மீண்டும் உறுதிப்படுத்தினார் எனவும், காஷ்மீர்
மக்களுக்கு உதவுவதற்காக எந்த எல்லைக்கும் செல்ல பாகிஸ்தான் இராணுவம் தயார்
என அவர் கூறினார் எனவும் பாகிஸ்தான் பாதுகாப்புப் படைகளின் பொதுமக்கள் தொடர்புகள்
பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
‘காஷ்மீர்
தொடர்பான இந்தியாவின்; நடவடிக்கைகளை
நிராகரிக்கும் பாகிஸ்தான் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு பாகிஸ்தான் இராணுவத்தின்
படைத் தளபதியின் மாநாடு முழுமையாக ஆதரவளிக்கிறது.
ஜம்மு – காஷ்மீர்
மீதான இந்தியாவின் ஆக்கிரமிப்பை சட்டபூர்வமாக்குவதற்கு பல தசாப்தங்களுங்கு
முன்னர், 370 ஆவது மற்றும் 35 ஏ சட்டப்பிரிவுகள் மூலம் இந்தியா மேற்கொண்ட முயற்சிகளை
பாகிஸ்தான் ஒருபோதும் அங்கீகரிக்கவில்லை.
இப்போது இந்தியாவினாலேயே அச்சட்டப்பிரிவுகள்
இரத்துச்செய்யப்பட்டுள்ளன’ எனவும்
மேற்படி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘காஷ்மீர் மக்களின் சுதந்திரப் போராட்டத்துக்கு
பாகிஸ்தான் இராணுவம் இறுதிவரை துணையாக நிற்கும்.
இது தொடர்பான எமது கடப்பாடுகளை
நிறைவேற்றுவதற்காக எந்த எல்லைக்குச் செல்லவும் நாம் தயாராகவுள்ளோம்’ என ஜெனரல் கமர் ஜாவேத் பாஜ்வா தெரிவித்தார் என மேற்படி
அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
