Our Feeds


Friday, August 23, 2019

www.shortnews.lk

வசீம் தாஜுதீன், லசந்த கொளை உள்ளிட்ட வழக்கு விசாரனை அறிக்கைகளை வழங்க வேண்டாம் - சட்ட மா அதிபர்

 



வசீம் தாஜூதீன், லசந்த விக்ரமதுங்க கொலை உள்ளிட்ட ஏனைய வழக்குகள் தொடர்பான முழுமையற்ற விசாரணை அறிக்கைகளை வழங்க வேண்டாம் என சட்டமா அதிபர், பதில் பொலிஸ் மா அதிபருக்கு பணித்துள்ளார். 

குறித்த விசாரணை அறிக்கை, பதில் பொலிஸ் மா அதிபரால் சட்டமா அதிபருக்கு நேற்று ஒப்படைக்கப்பட்டது. 

வசீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்ரமதுங்க கொலை உள்ளிட்ட ஏனைய சம்பவங்கள் தொடர்பான விசாரணை அறிக்கையை, வெவ்வேறு கோப்புகளாக தயாரித்து நாளைய (23) தினத்திற்கு முன்னர் சமர்பிக்குமாறு பதில் பொலிஸ்மா அதிபர், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு ஏற்கனவே அறிவித்திருந்தார். 

வசீம் தாஜுதீன் கொலை, லசந்த விக்ரமதுங்க கொலை, கீத் நொயார் கடத்தல், 17 பணியாளர்கள் கொலை மற்றும் 11 இளைஞர்கள் கடத்தி செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துமாறு சட்டமா அதிபரினால் கடந்த 15 ஆம் திகதி பதில் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »