Our Feeds


Sunday, September 22, 2019

www.shortnews.lk

மஹா சங்க தேரர்களின் அனுமதியுடன் என்று கூறாமல் உரையாற்றிய அமைச்சர் ஹலீம் மீது விமர்சனம்

 



கண்டி, பூஜாபிட்டிய புதிய தபால் அலுவலகம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (21) பிற்பகல் திறந்து வைக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய அலுவல்கள் அமைச்சர் எம்.எம்.ஏ ஹலீம் கலந்து கொண்டிருந்தார். இதன்போது, அமைச்சர் எம்.எம்.ஏ.ஹலீம் சங்க தேரர்களிடம் அனுமதி பெறாமல் தனது உரையை ஆரம்பித்தார்.

எனினும, சங்க தேரர்களிடம் அனுமதி பெறவில்லை என அவருக்கு அறிவித்த போதும், அதனை பொருட்படுத்தாது அவர் தனது உரையை தொடர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »