Our Feeds


Monday, September 23, 2019

www.shortnews.lk

நானே ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன். கவனமாக கருத்துக்களை வெளியிடுங்கள். - கபீர் ஹாஷிமை அழைத்து கண்டித்தார் ரனில்

 


எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட நான் தீர்மானித்துவிட்டேன். எனவே அதற்கேற்ப செயற்படுங்கள். இவ்வாறு அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளருமான கபீர் ஹாஷிமிடம் இன்று திட்டவட்டமாக தெரிவித்திருக்கிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க.

இன்று காலை கபீரை அழைத்துப் பேசிய ரணில்கட்சியின் தலைவர் என்ற அடிப்படையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடவுள்ளதாகவும் அதனால் கண்டபடி கருத்துக்களை வெளியிட்டோ அல்லது கட்சிக் கோட்பாடுகளை மீறும் வகையிலோ யாரும் செயற்படக் கூடாதென பணித்துள்ளார்.



அதேபோல் சஜித் ஆதரவு மாத்தளை எம்.பிக்கள் இருவரை அழைத்துள்ள ரணில் நிதானமாக செயற்படுமாறும் எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து செயற்படுமாறும் அறிவுறுத்தியுள்ளதாக அறியமுடிந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »