எதிர்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை நியமிப்பதற்கு ஐ.தே.க தீர்மானித்துள்ளது. கட்சி தலைவராக தொடர்ந்தும் ரனில் விக்கிரமசிங்கவே தொடர்வார் என்றும் முடிவு எட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசிய முன்னனியின் பங்காளிக் கட்சிகள் நடத்திய சந்திப்பு மற்றும் சபாநாயகர் கரு, ரனில், சஜித் ஆகியோர் நடத்திய சந்திப்புக்களின் பின்னர் இந்தத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்த முடிவு சபாநாயகருக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளது.
