எம்.சி.சி ஒப்பந்தத்தை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கும் அது தொடர்பில் ஆராய்வதற்காக நான்கு பேர் கொண்ட குழுவொன்றை நியமிப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (19) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட அமைச்சரவை பேச்சாளர், அமைச்சர் பந்துல குணவர்தன இதனை தெரிவித்தார்.
கலாநிதி லலிதசிறி குணருவன் (தவிசாளர்), டீ.எஸ.ஜயவீர, போக்குவரத்து அமைச்சின் முன்னாள் செயலாளர், ஜனாதிபதி சட்டத்தரணி நிஹால் ஜயவர்தன மற்றும் நாலக ஜயவீர ஆகியோர் இந்த குழுவின் உறுப்பினர்களாவர்.
