Our Feeds


Monday, January 13, 2020

www.shortnews.lk

ஐ.தே.க தலைமை பதவியை விட்டுக் கொடுப்பதில்லை என்பதில் ரனில் உறுதி

 

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைப் பதவியில் இவ்வாரம் மாற்றங்கள் வருமென எதிர்பார்க்கப்பட்டாலும் அப்படி ஒன்று நடக்காதெனவும் தலைமைப் பதவியை ரணில் விட்டுக் கொடுக்கும் சூழ்நிலை இல்லையென்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேசமயம் கரு ஜயசூரிய ,சஜித் பிரேமதாச ஆகியோரை கொண்ட தலைமைத்துவ சபை ஒன்றை இவ்வாரம் அமைக்க ரணில் திட்டமிட்டுள்ள அதேசமயம் சஜித் தரப்பு அதனை ஏற்றுக்கொள்ளும் நிலையில் இல்லையென தெரிகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ நெருக்கடி மிக உச்சக் கட்டத்தை அடைந்துள்ள இந்த பின்னணியில் அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவுடன் இரகசிய பேச்சுக்களை நடத்தி வருகின்றனர்.

மூன்றிலிரண்டு பெரும்பான்மை கொண்ட ஆட்சியொன்றை அமைக்கும் வகையிலான அரசை அமைப்பது குறித்தும் அது தொடர்பான அரசியல் குறித்தும் இந்த பேச்சுக்களின் போது ஆராயப்படுவதாக அறியமுடிந்தது.

இதற்கிடையில் இவ்வாரம் ஐக்கிய தேசியக் கட்சி செயற்குழு கூடும்போது தலைமைத்துவ விவகாரம் தொடர்பில் வாக்கெடுப்பு எதுவும் நடத்தப்பட மாட்டாதென மேலும் அறியமுடிந்தது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »