மியன்மர் அரசாங்கத்தினால் முஸ்லிம்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் தாக்குதல்களிலிருந்து தப்பிக்கும் வகையில் மியன்மாரின் ரோஹிங்யா அகதிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று வங்காலதேசத்தின் கடற்படப்பில் கவிழ்ந்ததில் குறைந்தது 14 பேர் உயிரிழந்துள்ளனர்.
வங்காலதேசத்தில் உயிர் பிழைக்க தஞ்சமடைந்த ரோஹிங்யா அகதிகளில் சுமார் 130 பேர் மலேசியாவுக்கு செல்ல முற்பட்ட வேலையிலேயே இந்த விபத்து இடம் பெற்றுள்ளது.
இவர்களில் மரணித்த அணைவரும் பெண்களும் சிறுவர்களுமாகும். சுமார் 70க்கும் மேற்பட்டவர்களை உயிருடன் மீட்டுள்ளதாக வங்காலதேசம் தெரிவித்துள்ளது.

