இலங்கையில் ஒரு நாளைக்கு 38 பேர் புற்று நோயினால் மரணிப்பதாகவும், தினமும் 64 புதிய புற்று நோயாளிகள் அடையாளம் காணப்படுவதாகவும் தேசிய புற்று நோய் கட்டுப்பாட்டு நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் ஜானகி விதான பத்திரன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் மொத்தமாக 56054 புற்றுநோயாளர்கள் இனங்கானப்பட்டுள்ளனர்.
2018ல் இனம் காணப்பட்ட 23530 நோயாளிகளில் 14013 பேர் உயிரிழந்துள்ளனர். புற்று நோய் வகைகளில் மூன்றில் ஒன்றை முற்றாக குணப்படுத்த முடியும் மற்றைய இரண்டை ஆரம்பத்திலேயே கண்டறிந்தால் மாத்திரமே குணப்படுத்த முடியும் என புற்று நோய் வைத்திய நிபுணர் சுராஜ் பெரேரா தெரிவித்துள்ளார்.
