பாராளுமன்ற தேர்தலில் புதிய கூட்டணி அமைத்து “இதயம்” சின்னத்தில் போட்டியிட முடிவு செய்திருந்தது சஜித் தரப்பு.
சஜித் தரப்பினால் சேனக என்பவருக்கு சொந்தமான “அபே ஜாதிக பெரமுன” என்ற கட்சியை “ஜாதிக சமகி பலவேகய” என மாற்றி “இதயம்” சின்னத்தில் போட்டியிட தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் சஜித் தரப்பு முன்வைத்திருந்த கோரிக்கையை தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்றுக் கொள்ள மறுத்துள்ளதுடன், குறித்த கோரிக்கை முறைப்படியாக சமர்பிக்கப்பட வில்லை என்றும் தெரிவித்துள்ளது.
