172 பேருடன் பயணித்த ரஷ்யாவின் எயார் பஸ் 320 என்ற பயணிகள் விமானம் மீது தவறுதலாக சிரியாவின் ஏவுகணை மற்றும் விமான பாதுகாப்பு பிரிவினால் நடத்தப்பட்ட தாக்குதலில் இருந்து விமானம் மயிரிழையில் தப்பியுள்ளதாக ரஷ்யா அறிவித்துள்ளது.
ஏவுகனை விமானத்தை நெருங்கிய நேரம் வலுக்கட்டாயமாக விமானம் வேறு திசைக்கு திருப்பப்பட்டதால் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளதுடன் விமானம் சிரியாவில் அமைந்துள்ள ஹமீம் விமான தளத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேல் நடத்திய தாக்குதலொன்றுக்கு பதிலடியாக சிரியாவின் விமான தடுப்பு பிரிவு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது.
