பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அரசியலில் இருந்து ஓய்வெடுத்து கட்சி தலைமைப் பொறுப்பை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ஷவிடம் வழங்கி விட்டு கட்சியினதும், அரசாங்கத்தினதும் ஆலோசகராக செயல்பட வேண்டும். அதுதான் நாட்டு மக்களின் தற்போதைய கோரிக்கையாகவும் உள்ளது என முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலியே ரத்ன தேரர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.
பொது ஜன பெரமுனவின் தலைமைப் பதவியை ஜனாதிபதிக்கு அளித்து அவரை சுதந்திரமான செயல்பட மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் வழிவிட வேண்டுமென ரத்ன ஹிமி மேலும் தெரிவித்துள்ளார்.
