கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு வழங்கப்படும் ஐயாயிரம் ரூபா கொடுப்பனவை ஜூன் மாதம் வழங்காதிருக்க அரசு தீர்மானித்துள்ளது.
இந்த கொடுப்பனவு வழங்கல் தேர்தல் சட்டதிட்டங்களை மீறுவதாக உள்ளதென தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அரசுக்கு எழுத்துமூலம் அறிவித்ததையடுத்து இந்த தீர்மானத்தை அமைச்சரவை எடுத்துள்ளது.
முன்னதாக இந்த கொடுப்பனவை ஜூன் மாதத்திற்கும் வழங்க அரசு தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
