இலங்கையின் 9 வது நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களின் முதல் தனிநபர் மசோதாவை பொதுஜன
பெரமுன (SLPP ) பாராளுமன்ற உறுப்பினர் பிரேமிதா தென்னகோன் நாடாளுமன்றத்தில் ஒப்படைத்தார்.
தனிநபர் மசோதா நேற்று (26) நாடாளுமன்ற பொதுச்செயலாளர் தம்மிகா தஸ்நாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டதாக எம்.பி. தென்னகோன் தெரிவித்தார்.
இந்த மசோதாவின் முக்கிய நோக்கம் இலங்கையில் திருமணத்தின் குறைந்தபட்ச வயதை 18 ஆக அறிமுகப்படுத்துவதாகும், என்றார்.
அனைத்து சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளுக்கும் சம உரிமை வழங்கப்பட வேண்டும் என்று கூறிய அவர், இந்தச் சட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டியது அவசியம் என்றும் கூறினார்.
இலங்கையில் குறைந்தபட்ச திருமண வயதை 18 ஆக்க சட்டம் அமுல்படுத்த வேண்டி பாராளுமன்றில் தனிநபர் மசோதா கையளிக்கப்பட்டது.
