முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அல்லது அல்லது முன்னாள் அமைச்சர் மகிந்த யாப்பா அபயவர்த்தன நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி சபாநாயகர் பதவியில் ஆர்வத்தை வெளியிட்டுள்ளார் எனினும் மகிந்த யாப்பா அபயவர்த்தன சபாநாயகராக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அரசவட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இருவருக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப்படாதது குறிப்பிடத்தக்கது.
