Our Feeds


Friday, August 7, 2020

www.shortnews.lk

கைது செய்யப்படுவதை தடுக்கக் கோரிய ரிஷாதின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

 

புவனெக அலுவிகாரே, எல்.டீ.பீ தெஹிதெனிய மற்றும் எம்.துரைராஜா ஆகிய முவரடங்கிய நீதிபதிகள் குழாமினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஆராய்ந்த சந்தர்ப்பத்தில் ஆட்சேபனை தெரிவித்த சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையான பிரதி சொலிசிட்டர் ஜெனரால் நெரீன் புல்லே, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணை சிக்கலானது எனவும், மனுதாரரின் கோரிக்கைக்கு அமைவாக தடையுத்தரவு வௌியிடப்பட்டால் விசாரணை செயற்பாடுகளை உரிய முறையில் முன்னெடுத்துச் செல்வதற்கு தடங்கலாக அமையும் எனவும் குறிப்பிட்டார்.

பின்னர், நீண்ட பரிசீலனையின் பின்னர் குறித்த மனு விசாரணைக்கு அனுமதி வழங்கும் அளவிற்கு போதுமான சட்ட ஏற்பாடுகள் வௌிப்படாததால் அதனை நிராகரிக்க உயர்நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »