
தலதா மாளிகையின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மீது சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று காலை (31) இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேரர் தெரிவித்தார்.
அதனை வழமைக்கு கொண்டுவந்த பின்னர் மீண்டும் பிற்பகல் நேரத்தில் சைபர் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
மீண்டும் இணையதளத்தை வழமைக்கு கொண்டு வரும் முயற்சியில் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழு ஈடுபட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.