ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ இம்தியாஸ் பாக்கிர் மாக்காரின் கோரிக்கையின் பேரில் துருக்கி - இலங்கை பாரளுமன்ற நட்புறவு சங்கத்தின் ஸ்தாபித்தல் நிகழ்வு இன்று (25) பாராளுமன்றத்தில் இடம் பெற்றது.
இந்நிகழ்வில் சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேயவர்தன,இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான துருக்கித் தூதுவர் ஆர்.டிமெட் செர்கெர்சியோக்லு ஆகியோர் கலந்து கொண்டனர்.




