இந்தியாவின் கர்நாடகா, உத்தராகண்ட், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ஆந்திரா, ஹரியாணா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் கறுப்பு பூஞ்சை என்ற நோய் பரவுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொவிட்-19 தொற்றுறுதியானவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவதாக இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நோய் நிலை காரணமாக இந்தியாவில் சில மரணங்களும் பதிவாகியுள்ளன.
இந்தநிலையில் இந்த நோய் நிலை தொடர்பில் எமது செய்தி பிரிவு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடகக்குழு மற்றும் மத்தியக்குழு உறுப்பினரான வைத்தியர் வாசன் இரட்ணசிங்கத்தை தொடர்பு கொண்டு வினவியது.
இதற்கு பதிலளித்த அவர் இலங்கை மக்களும் இது தொடர்பில் அவதானமாக செயற்பட வேண்டும் என அறிவுறுத்தல் விடுத்தார்.
