மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சீமோன் சந்தியாகு, ராகவன் சுரேஷ், சிறில் ராமசாமி, எம்.எம்.அப்துல் சலீம், சந்தன் ஸ்டாலின் ரமேஷ், கெப்ரில் எட்வர்ட் ஜூலியன் ஆகியோர் இன்று ஜனாதிபதியினால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த நடராஜா சரவணபவன், புருசோத்தமன் அரவிந்தன், ராசபாலவன் தபோரூபன், ராசத்துரை ஜெகன், நல்லன் சிவலிங்கம், சூரியமூர்த்தி ஜீவோகன், சிவப்பிரகாசன் சிவசீலன், மயில்வாகனம் மதன், சூரியகாந்தி ஜெயசந்திரன் ஆகியோர் இன்று விடுவிக்கப்பட்டுள்ளதோடு மாத்தளை மாவட்டத்தை சேர்ந்த விஸ்வநாதன் ரமேஸூம் விடுவிக்கப்பட்டுள்ளார்.