Our Feeds


Friday, June 25, 2021

www.shortnews.lk

‘நீதியில்லாத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது’ - துமிந்த சில்வா விடுதலைக்கு, கொல்லப்பட்ட பாரத லக்ஷ்மனின் மனைவி எதிர்ப்பு.

 



“மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் மூவர் உறுதிப்படுத்திய உயர்நீதிமன்ற நீதியசர்கள் ஐவர் வழங்கிய தீர்ப்பை நடைமுறைப்படுத்தாத நாடொன்று உருவாகியுள்ளது” எனத் தெரிவித்த முன்னாள் அமைச்சர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர “நீதியில்லாத நாட்டில் சூரியன் பிரகாசிக்காது” எனத் தெரிவித்துள்ளார்.


தனது கணவனை சுட்டுப் படுகொலை செய்த வழக்கில் குற்றவாளியாக இனங்காணப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த மரண தண்டனை கைதியான துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியுள்ளார்.

இதுதொடர்பில் பிரேமசந்திரவின் மனைவி சுமனா பிரேமச்சந்திர எழுதியுள்ள குறிப்பொன்றிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

“விடுதலை” ஒரு மதமாகவும் நடைமுறையாகவும் மாற்றியுள்ள கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் பாரத லக்ஷ்மனை படுகொலை செய்த ஒரு மனித படுகொலையாளிக்கு விசேட ஜனாதிபதி பொது மன்னிப்பை வழங்கி விடுவித்துள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதய சாட்சியமிருக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும் பிழையென நன்றாக தெரியும் கொலையாளி பொசன் போய தினத்தன்று விடுதலை செய்யப்பட்டுள்ளார். ‘ ஒரு நாட்டுக்குள் பல சட்டங்கள் செயற்படுகின்றது’ என்பதை நிரூபிப்பதற்கே படுகொலையாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

“நாட்டின் மீது அன்பு செய்திய லக்ஷ்மன் பிரேமசந்திர மற்றுமொரு சிங்களவரான தமித் தமிழரான குமார் ஹசீம் என்ற முஸ்லிம் ஆகிய மூவரின் உடல்களின் மீதும் ஏறி நின்று துப்பாக்கிப் பிரயோகங்களை மேற்கொண்ட படுகொலையாளர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

“கொலையாளி விடுவிக்கப்பட்டு நீதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளது. நீதி இல்லாத ஒரு நாட்டில் சூரியன் பிரகாசிக்காது. சட்டம் இருக்கும் நாட்டில் குற்றவாளி தண்டிக்கப்படுவார். சட்டம் இல்லாத நாட்டில் தண்டனைக்கு நீதி இல்லாமல் குற்றவாளிகள் விடுவிக்கப்படுகிறார்கள்” என்றும் அந்தக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »