அநுராதபுரம் போதனா வைத்தியசாலையின் கீழ் இயங்கும் மெத்சிறி சேவன கொரோனா சிகிச்சை நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஐந்து கொரோனா தொற்றாளர்கள், நேற்று முன்தினம் (01) உயிரிழந்துள்ளனர்.
கல்கமுவ, கஹடகஸ்திகிலிய, வெலிஓய, நொச்சியாகம மற்றும் ஹிரிபிட்டியாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 31, 74, 35, 65 மற்றும் 56 வயதுகளை கொண்ட ஐவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இவ்வாறு உயிரிழந்த ஐவரது சடலங்களும், நேற்று முன்தினம் அநுராதபுரம் நிசல நிமினய பொது மயானத்தில் தகனம் செய்யப்பட்டுள்ளது.
