பயிற்சி அரச உத்தியோகத்தர்களுக்கு வழங்கப்படும் 42 நாட்கள் பிரசவ விடுமுறையை 84 நாட்களாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் கோரியுள்ளார்.
“2020ஆம் ஆண்டு இணைத்துக்கொள்ளப்பட்ட பயிற்சி பட்டதாரிகளுக்கு பிரசவ விடுமுறை 42 நாட்களாக வழங்கப்பட்டுள்ள நிலையில் அவர்களது விடுமுறையை ஏனைய அரச பணியாளர்களுக்குப் போன்று 84 ஆக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.
மேலும் இரண்டாவது மொழிப் பரீட்சை காரணமாக அனைத்து அரச அதிகாரிகளும் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாவதால் குறித்த பரிட்சைக்காக இரண்டாம் மொழி பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியதாகவும் தமிழ் மொழி பரீட்சைக்குத் தோற்றுவதற்கு பதிலாக பாடத்திட்டத்தில் நிபுணத்துவத்தைப் பெற முடியும் என்றார்.