Our Feeds


Thursday, June 24, 2021

www.shortnews.lk

மின்சார பிரச்சினையா? வட்ஸ்அப், வைபர், IMO மூலம் தொடர்பு கொள்ள முடியும்.

 



கனகராசா சரவணன்


மின்சார முறைபாடுகள் குறித்து விசாரித்து  தீர்வு காணும் வகையில்  0775 687 387 எனும் விசேட அலைபேசி இலக்கமொன்றை  இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு  நேற்று (23) அறிமுகப்படுத்தியுள்ளது.


நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள பயணக் கட்டுப்பாட்டுக்கு  காரணமாக மின்சாரப் பாவனையாளர்கள் தமது முறைபாடுகளை குறித்த இலக்கத்துக்கு வட்ஸ்அப், வைபர் மற்றும் இமோ மூலமாக மேற்கொள்ள முடியுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பாவனையாளர்கள் தங்கள் எழுத்து மூலமான முறைப்பாடுகளை ஒரு புகைப்படம் எடுத்து மேற்குறித்த சமூக வலைத்தளங்களின் ஊடாக பதிவேற்றலாம் எனவும் அல்லது குறுந் தகவலாக டைப் செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

குறுகிய காலத்தில் சிறப்பான சேவையைப் பெற்றுக்கொடுப்பதற்கு பெயர் முகவரி  அலைப்பேசி இலக்கம் மற்றும் மின்னஞ்சல் முகவரி (இருப்பின்) மின்சாரக் கணக்கு இலக்கம் முறைப்பாடு விவரம்  தொடர்புடைய இணைப்புகள் (இருப்பின்) ஆகியவற்றை குறிப்பிடுமாறும் பாவனையாளர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

முறைப்பாடு சமர்ப்பிக்கப்பட்ட பின்னர்  குறிப்பு இலக்கமொன்று பாவனையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய அதிகாரிகளை நேரில் சந்திப்பதை தவிர்த்து  ஒன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »