வார இறுதி நாட்களில் பயணக் கட்டுப்பாட்டை அமுல்படுத்தாதிருப்பதற்கு கொவிட்-19 தடுப்புக்கான செயலணி தீர்மானித்துள்ளது.
இந்த செயலணி இன்று (25) கூடிய போதே இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், மாகாணங்களுக்கு இடையிலான பயணக் கட்டுப்பாடு தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என இராஜாங்க அமைச்சர் ஷன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
தற்போது முன்னெடுக்கப்படும் விதத்திலேயே, நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். (TC)