அத்தியாவசிய காரணங்கள் இன்றி வாகனங்களில் பயணிக்கும் நபர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் விதிமுறைகளின் கீழ் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
இந்நிலையில், அத்தியாவசிய காரணங்கள் இன்றி சட்டத்திற்கு முரணாக பயணிக்கும் நபர்களை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு அனுப்பி வைப்பதற்காக சுகாதார அமைச்சிடம் அனுமதி பெறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
