நாடு முழுவதும் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள பயணத்தடை நீடிக்கப்படுமா அல்லது தளர்த்தப்படுமா என்பது குறித்து நாளை இறுதித் தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ஷவை நாளை சந்திக்கவுள்ள கொரோனா பணிக்குழு தற்போதைய நிலைமையை மறுஆய்வு செய்து இந்த விடயம் குறித்து தீர்மானிக்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.
