வீடொன்றில் கொவிட் நோயாளர் ஒருவர் அடையாளம் காணப்படும் பட்சத்தில், அதனூடாக வீட்டிலுள்ள அனைவருக்கும் கொவிட் தொற்று ஏற்படும் நிலைமை அதிகரித்துள்ளதாக சுகாதார தரப்பினர் தெரிவிக்கின்றனர்.
பாதுக்க சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் துமிந்திர கஹங்கம இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பாதுக்கை வாராந்த சபை வளாகத்தில் கடந்த 3ம் திகதி 220 பேருக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், 175 பேருக்கு தொற்று ஏற்பட்டிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்தே, அவர் இதனைக் கூறியுள்ளார்.
