கொரோனா வைரஸ் பரவல் காரணமாக பருத்தித்துறை நகர் உள்ளிட்ட மேலும் சில பகுதிகள் மறு அறிவித்தல் வரை முடக்கப்பட்டுள்ளதாக பருத்தித்துறை சுகாதார பிரிவினர் அறிவித்துள்ளனர்.
அதன்படி, குறித்த பகுதிகளில் இன்று 35 கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்தே இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தும்பளை 3ஆம் குறுக்குத்தெரு தொடக்கம் கடற்கரை வரையான பகுதிகளும் பஸ் நுழைவாயில், பத்ரகாளி அம்மன் ஒழுங்கை உள்ளிட்ட பகுதிகள் முடக்கப்பட்டுள்ளன.