நாட்டில் நேற்றைய தினம் கொவிட் தொற்றால் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 3,779 ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்களில் 16 பெண்களும் 30 ஆண்களும் உள்ளடங்குகின்றனர்.

