புத்தளம் நகர சபை தலைவராக தெரிவு செய்யப்பட்ட எம்.எஸ்.எம் ரபீக் அவர்களை ஐக்கிய காங்கிரஸ் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் மௌலவி எம்.எஸ்.எம் ஸப்வான் நேரில் சந்தித்து கட்சியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்தார்.
அதன்போது வாழ்த்துக் கடிதம் ஒன்றும் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.
குறித்த சந்திப்பில் சமகால அரசியல் நிகழ்வுகள் பகிர்ந்து கொள்ளப்பட்டதுடன் நகர சபையின் மக்களுக்கான அபிவிருத்திப் பணிகளில் ஐக்கிய காங்கிரஸ் கட்சி தொடர்ந்தும் உறுதுணையாக இருக்கும் என்று புத்தளம் புதிய நகர பிதாவுக்கு ஸப்வான் மௌலவி அவர்களால் தெரிவிக்கப்பட்டது.