சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றாத, முகக்கவசங்களை முறையாக அணியாதவர்களை கைது செய்வதற்காக, மேல் மாகாணத்தில் விசேட பொலிஸ் குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன.
மேல்மாகாணத்தில் கூடுதலான எண்ணிக்கையானோர் முகக்கவசங்களை அணிவதில்லை என புலனாய்வுப் பிரிவினர் தகவல்களை கொடுத்துள்ளனர். இதனையடுத்தே, அவ்வாறானவர்களை கைது செய்வதற்காக, விசேட பொலிஸ் குழுகள் களமிறக்கப்பட்டுள்ளன.
தனி நபர்களும் களமிறக்கப்பட்டுள்ளனர். அத்துடன், 30 பொலிஸ் குழுக்களும் களமிறக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸ் தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.