இலங்கை ஜி.எஸ்.பி.பிளஸ் வரிச் சலுகையை இழக்கும் அபாயம் இல்லை என வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (11) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு கூறினார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் அரசாங்கத்தையும் இராணுவ வீரர்களையும் காட்டிக்கொடுக்க முயன்றவர்களே இவ்வாறு அவதூறு பரப்பி வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் இந்த விடயம் தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்துடன் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருவதாகவும் அமைச்சர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டார்.