பொதுமக்கள் எதிர்வரும் வார இறுதியில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறி செயற்பட்டால், கடந்த காலங்களில் விதித்த பயணத்தடையை மீண்டும் அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படுமென பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்தார்.
மேலும், இவ்வார இறுதியில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக மேலதிக பொலிஸ் அதிகாரிகளை நியமிக்க தீர்மானித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.