Our Feeds


Monday, August 2, 2021

www.shortnews.lk

படுக்கையறை மெத்தையின் கீழ் 30 பாம்புக் குட்டிகள் - மாவத்தகம வீட்டில் சம்பவம்

 



மாவத்தகம - தெல்கொல்லவத்தை பகுதியில் உள்ள ஒரு வீட்டு, படுக்கையறை மெத்தையின் கீழ் 30 பாம்புக் குட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.


குருநாகல் மாவட்ட செயலகத்தில் பணிபுரியும் சுற்றுச்சூழல் ஆர்வலர் கெலும் சோமரத்ன இன்று (02) வீட்டிற்குச் சென்று 30 பாம்புக் குட்டிகளைக் கண்டுபிடித்தார்.

வீட்டு உரிமையாளரின் மனைவி மற்றும் குழந்தைகள் படுக்கும் மெத்தையின் கீழ், பல நாட்களாக 30 பாம்புக் குட்டிகள் இருந்துள்ளன.

நேற்று முன்தினம், வீட்டில் இரண்டு குட்டி பாம்புகள் காணப்பட்டன. வீட்டின் உரிமையாளர் இரண்டு பாம்புகளையும் கொன்றார்.

நேற்று முன்தினம் பின் இரவில், கொசு வலையிலிருந்து மற்றொரு பாம்புக் குட்டி படுக்கைக்குள் நுழைந்து, தூங்கிக் கொண்டிருந்த ஒருவரின் உடலில் ஊர்ந்து சென்றது.

அவர்கள் இதை சுற்றுச்சூழல் ஆர்வலர் கெலுமுக்கு தெரிவித்த பிறகு, அவர் குறித்த வீட்டிற்கு வருகைத்தந்து வீட்டை ஆய்வு செய்து, படுக்கை மெத்தையின் கீழ் இருந்த பாம்புக் குட்டிகளை பத்திரமாக வெளியேற்றினார்.

வீட்டை ஆய்வு செய்த போதிலும், பாம்பு குட்டிகள் பொரித்த முட்டையின் துகள்கள் எதுவும் தென்படவில்லை. வீட்டின் இன்னொரு பகுதியிலிருந்து தாய்ப் பாம்பென நம்பும் ஒரு பாம்பும் கண்டறிப்பட்டு, பாதுகாப்பாக மீட்கப்பட்டது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »