Our Feeds


Thursday, September 23, 2021

ShortNews

பாடசாலைகள் எப்போது திறக்கப்படும்? நாளை வெளியாகவுள்ள அறிவிப்பு



கொரோனா வைரஸ் பரவல் காரணமாக சுமார் ஒன்றரை வருடங்களாக மூடப்பட்டிருக்கின்ற பாடசாலைகளை மீளத்திறப்பது குறித்த அறிவிப்பு நாளை வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.


இது தொடர்பில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் அவதானம் செலுத்தியுள்ளதோடு, நாளைய தினத்தில் பாடசாலைகளை மீள திறப்பது பற்றிய தெளிவுபடுத்தல்கள் இடம்பெறவுள்ளதாக அறியமுடிகிறது.

எவ்வாறாயினும் நாடு முழுவதும் உள்ள பாடசாலைகளை கட்டம் கட்டமாக திறப்பதற்கு கல்வியமைச்சு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதற்கான பரிந்துரையும் வழிகாட்டலும் அடங்கிய அறிக்கை கடந்த வாரம் கல்வி அமைச்சிடம் சுகாதார அமைச்சு கையளித்திருந்தது.

இந்த நிலையில் நாளை வெள்ளிக்கிழமை கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் பாடசாலைகள் திறக்கப்படும் தினம் தொடர்பான அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »