Our Feeds


Wednesday, September 22, 2021

SHAHNI RAMEES

வாழ்நாளில் அதைப் பார்க்க நினைத்து கூட பார்க்கவில்லை


 சிறைச்சாலைகள் முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தையுடன், தான்

வெலிக்கடை சிறைச்சாலைக்கு சென்று, தூக்குமேடையை பார்வையிட்டதாக வெளிவரும்
குற்றச்சாட்டுகள் போலியானவை என இலங்கை திருமதி அழகியான புஷ்பிக்கா டீ சில்வா, தனது வாழ்நாளில் அதைப் பார்க்க நினைத்து கூட பார்க்கவில்லை என்பதுடன், பார்க்க வேண்டும் என ஆசைப்படவும் இல்லை என தெரிவித்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற அன்று தான், கொழும்பில் இருக்கவில்லை என தெரிவித்துள்ள
அவர்,அன்று தான் மாத்தறைக்குச் சென்றதாகவும் அதனை அதிவேக வீதியில்
பொறுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு கமெரா மூலம் உறுதிப்படுத்தலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

தனக்கு எதிராக பாரிய சதித்திட்டம் ஒன்று முன்னெக்கப்படுவதாகத் தெரிவித்துள்ள அவர்,
இவ்வாறான ஒரு குற்றத்தை எவருக்கும் செய்ய வேண்டாம் என கேட்டுக்கொள்வதாகவும்
தெரிவித்துள்ளார்.

தான் கைகள் மாறிச் செல்லும் பெண் அல்ல என்றும் தெரிவித்துள்ள அவர், தன்னால் தவறு
ஏற்படாமல், எந்தவொரு தவறையும் ஏற்றக்கொள்ள மாட்டேன். சாட்சி இல்லாமல் எப்போதும்
குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என்றார்.

அந்த சம்பவத்துக்கு தான் தொடர்புபடவில்லை. சிறைச்சாலைக்கு தான் போகவில்லை.
பொறுப்புடன் கூறுகிறேன் சாட்சியுடன் கூறுங்கள். தான் அங்கே சென்றுள்ளதாக தவறு செய்தால் முதுகெழும்பை நேராக வைத்து ஏற்றுக்கொள்வேன் என தனியார் ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.

Subscribe to this Blog via Email :
Previous
Next Post »